வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா உரையரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் தேசிய நூலகர் தினத்தையொட்டி புத்தகங்களை வாசிப்போம், மனிதர்களை நேசிப்போம் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு நூலகர் எஸ்.ஜோதி தலைமை தாங்கினார்.
ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், பூங்குயில் சிவக்குமார், மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலகர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனுவாசன் பங்கேற்று, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.
மேலும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் அமைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பிறகு நூலகத் தந்தை அரங்கநாதன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் நான் விரும்பும் புத்தகம் என்ற தலைப்பில் உரையாற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜோதிடர் கு.சதானந்தன், முதுகலை ஆசிரியர் முருகன், பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சுதந்திர தினத்தையொட்டி நூலகத்திற்கு தேசிய கொடி வழங்கப்பட்டது. இறுதியில் சமூக ஆர்வலர் மகாதேவன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment