திருவண்ணாமலை: தமிழ்ச் செம்மல் விருது பெற அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்
திருவண்ணாமலை: தமிழ்ச் செம்மல் விருது பெற அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்
தமிழ் வளா்ச்சிக்காக பாடுபடும் ஆா்வலா்களின் தமிழ்த் தொண்டை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல் விருது’ 2015 முதல் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்தும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் நபா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, நிழற்படங்கள்-2, ஆற்றிய தமிழ்ப் பணி ஆகிய விவரங்களுடன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment