செய்யாறு: வெம்பாக்கம், பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அண்ணா-பெரியார் பிறந்த நாள் விழா!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அண்ணா பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது
இதை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட சேவை தலைவர் தி. வடிவேல் தலைமை வகித்தார்.
ஊர்புற நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வு ஆசிரியர் சாலை குப்புசாமி முன்னிலை வகித்தார்.
பேரறிஞர் அண்ணாவைப் பற்றி டி.ஜி. கணேசன் அக்னிச் சிறகுகள் லயன் சங்க பொருளாளர் சிறப்புரை ஆற்றினார்
"சமூக சீர்திருத்த கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார் எனவும் மூடநம்பிக்கை அறியாமை சுயமரியாதை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற ஒழுக்க நெறியோடு கொள்கை பற்றாளனாய் வாழ்ந்தார்" என கூறினார்.
ஆசிரியர் கு. தியாகராஜன் பெரியாரைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
"பெரியார் சமூக சீர்திருத்தவாதி எனவும் தீண்டாமை ஒழிப்பு சாதி ஒழிப்பு போன்ற கொள்கையோடு மக்களிடையே சாதி பாகுபாடுகளை கலைய அரும்பாடுபட்டார்" எனக் கூறினார்.
ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப் பரிசும் ஆறுதல் பரிசாக அனைத்து மாணவர்களுக்கும் பேனா பென்சில் வழங்கப்பட்டது நிகழ்வின் இறுதியாக நூலக புரவலர் பூ. பாபு நன்றி கூறினார்.
Comments
Post a Comment