வந்தவாசியில் முத்தமிழ் சமூகநீதி பேரவை சார்பில் முப்பெரும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் முத்தமிழ் சமூகநீதி பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி தலைமை தாங்கினார்.
எம்.எஸ்.டி.கார்த்திகேயன், நகர மன்றத் தலைவர் எச்.ஜலால், நகர திமுக செயலாளர் தயாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவை நிறுவனரும் , நகர மன்ற துணைத் தலைவருமான அன்னை க.சீனுவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நா.முத்துவேலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
சமூக நீதிக்காக பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஆற்றிய பணிகள் குறித்து விவரித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கவிஞர்கள் தமிழ்ராசா, பா.சீனிவாசன், மு.பிரபாகரன், கு.சதானந்தன், வந்தை குமரன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக், ரமேஷ் கண்ணன், திமுக பிரமுகர்கள் எஸ். அன்சாரி, பிச்சைக்கண்ணு நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான் அன்பரசு மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
பூங்குயில் சிவக்குமார் நிகழ்வை தொகுத்து வழங்கினார். இறுதியில் தினேஷ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment