வந்தவாசி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது
வந்தவாசி ஸ்ரீ.ரங்கநாதப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தேறியது.
பெரிய காலனி பகுதி கலியுக வரத சீனிவாச பெருமாள் கோவிலில் மகா தீபாராதனை நடைபெற்றது.
தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் மூல மூர்த்திகள் திருப்பதி ஏழுமலையான் பத்மாவதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேல்பாதி விஜயராகவப் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தெள்ளார் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் விடியற்காலை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
Comments
Post a Comment