வந்தவாசி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாசிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான வாசித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா தலைமை தாங்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், எய்டு இந்தியா திட்ட மேலாளர் க.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி ஆசிரியை சாந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் வந்தவாசி கிளை இயக்குநர் சு.தனசேகரன் பங்கேற்று வாசித்தல் திறன் பயிற்சி பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் பங்கேற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment