வந்தவாசி: டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது
வந்தவாசி வட்டத்தை சேர்ந்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.அனந்தராஜன், வந்தவாசி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் பெ.செல்வராஜ், தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் கே.ஆனந்தன் ஆகிய மூன்று ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா
நிகழ்விற்கு செய்யாறு சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி. விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன், பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரும், தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியின் இயக்குநருமான எஸ். அப்பாண்டைராஜன் பங்கேற்று, ஆசிரியர் பணியின் மகத்தான செயல்பாடுகளை விளக்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் சுரேஷ் பாபு, நூலகர் தமீம், ஆசிரியர்கள் சிவக்குமார், ரகுபாரதி, ராஜ் குமார், பூபாலன், அஜீத் குமார், கலைஞர் தமிழ்ச் சங்க தலைவர் வந்தை குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் இரா.அருண் குமார் தமிழிசை பாடல்களை பாடினார். பிறகு நல்லாசிரியர் விருது பெற்ற மூவரும் ஏற்புரை நிகழ்த்தினர்.
இந் நிகழ்வை எக்ஸ்னோரா கிளை ஆலோசகர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் ஊராட்சி செயலாளர் நரேஷ் குமார் நன்றி கூறினார்.
Comments
Post a Comment