Skip to main content

கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  

பாஜக உடனான கூட்டணி முறிவு  விவகாரத்தால் அதிமுகவில் கடந்த சில நாட்களாவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி நாளை அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்தால் கொதித்து போன அதிமுக, அண்ணாமலையை கடுமையாக சாடியது. அதோடு, பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என ஒரேயடியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.

இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், மீண்டும் சமாதான முயற்சி நடப்பதாக சொல்லப்பட்டது.

இருந்தாலும் அப்போதும் அண்ணாமலை பிடிகொடுக்காமல் பதிலடி தந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் செல்லூர் ராஜூ மூலமாக, அதிமுக சமாதானம் செய்ய முயற்சித்தது. பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்கிற முழக்கத்தை செல்லூர் ராஜூ முன்வைத்தார்.

அதெல்லாம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரிக்காது என அப்போது பதில் தந்தார் அண்ணாமலை.
இதனால் கடுப்பாகிப் போன அதிமுக டெல்லியிடம் பஞ்சாயத்து செய்ய முடிவெடுத்தது.

இதனால் அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் என ஐந்து தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனகூறப்பட்டது.

இதனால் ஜேபி நட்டாவை மட்டும் நேற்று முன் தினம் இரவு அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.

அப்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்பட்ட்டது. இத்தகைய பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி விவகாரத்தில் இன்னும் பஞ்சாயத்து முடியாத சூழலில், நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...