வந்தவாசி: வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி அமைத்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டமான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார்
மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி. ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்
உடன் மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் ஆரணி ஜெயபிரகாஷ் ஜி.வி.கஜேந்திரன் கலசபாக்கம் பொய்யாமொழி வெம்பாக்கம் திருமூலன் பிகே.நாகப்பன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி.பாஸ்கர் தெள்ளார் டிவி.பச்சையப்பன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் வந்தவாசி எம்.கே.ஏ.லோகேஷ்வரன் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜசேகர் நகர கழக செயலாளர்கள் வந்தவாசி ஓட்டல் பாஷா செய்யாறு கே.வெங்கடேசன் பெரணமல்லூர் மூர்த்தி அவைத்தலைவர் ஜனார்த்தனம் அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் கூட்டுறவு சங்கத் தலைவர் அனக்காவூர் ஏ.வி.சேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment