இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் இன்றுடன் 10 வது நாளை எட்டியிருக்கிறது!
இஸ்ரேல் ராணுவத்தினரால், காஸா மீது கொத்து கொத்துகளாக குண்டுகள் வீசப்பட்டதில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் ஏராளமானோர் பலியானதாகக் அஞ்சப்படுகிறது.
பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தாவிட்டால், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் நாட்டின் இதர கட்சிகளும் கூட, இஸ்ரேல் மீதான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பது, உலகிலேயே மிகவும் நெரிசலான பகுதியான காஸாவில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது
உயிர் பலிகள்
குறைந்தது 2,670 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது இவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள் ஆவர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400. இவர்களில் 286 பேர் ராணுவ வீரர்கள்.
காஸா சுகாதார அதிகாரிகள், இஸ்ரேல் வான்வழித்தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை ஐஸ்கிரீம் பதப்படுத்தும் டிரக்குகளில் வைத்திருக்கிறார்கள். அவற்றை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில், இடுகாடுகளிலும் போதிய இடமில்லாத நிலையும் நிலவுகிறது.
இஸ்ரேலின் ராணுவ தடயவியல் துறை நிபுணர்கள், கடந்த வாரம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானவர்கள் துன்புறுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் எரிபொருள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
தற்காலிகமாக போர் நிறுத்தம் அல்லது ரஃபா எல்லையை திறந்துவிடுவது போன்ற தகவல்களை ஹமாஸ் மறுத்துவிட்டது.
பாலஸ்தீன மக்கள், தங்கள் வசிப்பிடத்தை விட்டு உயிரைப் பயணம் வைத்து வெளியேறுவதைக் காட்டிலும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவே விரும்புகிறார்கள்.
இதற்கிடையே காஸாவில் எந்த நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது, அது தவறாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மேற்காசிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.
ஜோா்டனின் அம்மான், யேமனின் சனா, ஈரானின் டெஹரான் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சாலைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினா்.
லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியா்களின் புனித இடமான அல்-அக்ஸா மசூதிக்குள் பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள் என 20 பேரை மட்டும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இஸ்ரேலிய போலீஸாா் அனுமதித்ததாக அசோசியேடட் பத்திரிகையாளா் தெரிவித்தாா்.
அனுமதி மறுக்கப்பட்ட இளைஞா்கள் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பினா். அவா்களை போலீஸாா் கண்ணீா் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டினா். இதில் 6 போ் காயமடைந்தனா்.
Comments
Post a Comment