Skip to main content

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் இன்றுடன் 10 வது நாளை எட்டியிருக்கிறது!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடுமையான போர் இன்றுடன் 10 வது நாளை எட்டியிருக்கிறது! 

இஸ்ரேல் ராணுவத்தினரால், காஸா மீது கொத்து கொத்துகளாக குண்டுகள் வீசப்பட்டதில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் ஏராளமானோர் பலியானதாகக் அஞ்சப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தாவிட்டால், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் நாட்டின் இதர கட்சிகளும் கூட, இஸ்ரேல் மீதான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பது, உலகிலேயே மிகவும் நெரிசலான பகுதியான காஸாவில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது

உயிர் பலிகள்
குறைந்தது 2,670 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது இவர்களில் கால் பகுதியினர் குழந்தைகள் ஆவர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் பலியான இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1,400. இவர்களில் 286 பேர் ராணுவ வீரர்கள்.

காஸா சுகாதார அதிகாரிகள், இஸ்ரேல் வான்வழித்தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை ஐஸ்கிரீம் பதப்படுத்தும் டிரக்குகளில் வைத்திருக்கிறார்கள். அவற்றை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில், இடுகாடுகளிலும் போதிய இடமில்லாத நிலையும் நிலவுகிறது.

இஸ்ரேலின் ராணுவ தடயவியல் துறை நிபுணர்கள், கடந்த வாரம் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானவர்கள் துன்புறுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் எரிபொருள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

தற்காலிகமாக போர் நிறுத்தம் அல்லது ரஃபா எல்லையை திறந்துவிடுவது போன்ற தகவல்களை ஹமாஸ் மறுத்துவிட்டது.

பாலஸ்தீன மக்கள், தங்கள் வசிப்பிடத்தை விட்டு உயிரைப் பயணம் வைத்து வெளியேறுவதைக் காட்டிலும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவே விரும்புகிறார்கள்.

இதற்கிடையே காஸாவில் எந்த நிலப்பரப்பையும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது, அது தவறாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மேற்காசிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.

ஜோா்டனின் அம்மான், யேமனின் சனா, ஈரானின் டெஹரான் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு சாலைகளில் முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினா்.

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியா்களின் புனித இடமான அல்-அக்ஸா மசூதிக்குள் பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள் என 20 பேரை மட்டும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இஸ்ரேலிய போலீஸாா் அனுமதித்ததாக அசோசியேடட் பத்திரிகையாளா் தெரிவித்தாா்.

அனுமதி மறுக்கப்பட்ட இளைஞா்கள் இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பினா். அவா்களை போலீஸாா் கண்ணீா் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டினா். இதில் 6 போ் காயமடைந்தனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...