கலாமின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உரையரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு 'ஆகலாம் கலாம்' சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.
தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி.ஆனந்த் தலைமை தாங்கினார்.
தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன், புலவர் ந.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, புதுவை தமிழ்ச் சங்க தலைவரும், தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி தலைவருமான கலைமாமணி முனைவர் வி. முத்து பங்கேற்று, ஆகலாம் கலாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பேச்சு, ஒவியம், கட்டுரை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தெள்ளார் காவல் ஆய்வாளர் ரேகா மாணவர்களுக்கு புத்தக பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் கலாமின் பிறந்தநாள் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் பழ. சீனுவாசன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment