வந்தவாசி ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி ரெட் கிராஸ் சங்க கிளை சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் த.ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார்.
நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ். இராமலிங்கம், ரெட் கிராஸ் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பீ.ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெட் கிராஸ் செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.பொன்னுசாமி பங்கேற்று, டெங்கு விழிப்புணர்வு பற்றி விளக்கி நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
மேலும் வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.ஆர்.ஆனந்தன் பங்கேற்று டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும் அதிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
மேலும் வட்டார துப்புரவு மேற்பார்வையாளர் இளங்கோவன், சட்டப் பணிக்குழு ஆலோசகர் வி.விஜயகுமார், சுகாதார அலுவலர்கள் சீதாபதி, கணேஷ், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் மொ.ஷாஜகான், ஜி.விநாயக சதுர்த்தி, மு.பிரபாகரன், தூய்மை சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டது.
100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இறுதியில் பள்ளி ஜெஆர்சி ஒருங்கிணைப்பாளர் இ.சாதிக் அலி நன்றி கூறினார்.
Comments
Post a Comment