வந்தவாசி: அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் தேர்தல் பொறுப்பாளரும்,முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்
மாவட்ட கழக அவைத்தலைவர் டி.கே.பி.மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகிக்க,
துணைச்செயலாளர்கள் டி.பி.துரை விஎஸ்எஸ் லதாகுமார் வெம்பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை குணசீலன் மு.எம்எல்ஏ அருகாவூர் அரங்கநாதன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் தெள்ளார் டி.வி.பச்சையப்பன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் வெண்குன்றம் முனுசாமி வெம்பாக்கம் திருமூலன் பி.கே.நாகப்பன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி பாஸ்கர் நகர கழக செயலாளர்கள் செய்யாறு கே.வெங்கடேசன் வந்தவாசி ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment