வந்தவாசி: இளங்காடு உயர்நிலைப் பள்ளியில் கற்றல் திறன் வாசிப்பு விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இளங்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் கற்றல் திறன் வாசிப்பு வழிமுறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சுரேஷ் தலைமை தாங்கினார்.
இலவச சட்ட பணிக்குழு ஆலோசகர் வி.விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடற்கல்வி ஆசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டு வழிமுறைகள் பற்றி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் ஆகியோர் விவரித்து பேசினர்.
மேலும் தென்னக இரயில்வே சு.தனசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக பள்ளி நூலகத்திற்கு 30 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
மேலும் 10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பட்டதாரி ஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
Comments
Post a Comment