செய்யாறு: அனக்காவூா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
வெங்கோடு, பையூா், ஆகிய கிராமங்களில் நடைபெற்ற வாக்குச்சாவடி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேர்தல் பொறுப்பாளருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்
ஒன்றிய கழக செயலாளர்கள் சி.துரை முன்னாள் எம்எல்ஏ குணசீலன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் முன்னிலையில் நடைபெற்ற
இந் நிகழ்வில்,
" புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். வருகிற நாடாளுமன்ற தோ்தலில் நாற்பது இடங்களிலும் அதிமுக வெற்றி பெறுவதற்கு அதிமுக நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தாா். மேலும், தோ்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார் வாலாஜாபாத் கணேசன்
Comments
Post a Comment