பெரணமல்லூர்: அதிமுக பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூரில் அதிமுக பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்
ஒன்றிய கழக செயலாளர் ஜி.செல்வராஜ் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளர்
ஏ.கே.எஸ்.அன்பழகன் மு.எம்எல்ஏ மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் அனக்காவூர் சி.துரை தெள்ளார் டி.வி.பச்சையப்பன் நகர கழக செயலாளர் ஆர்.மூர்த்தி துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அறிவழகன்(எ) ஜவகர் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் அமான் பாஷா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment