ஆரணி சட்ட மன்றத் தொகுதி அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
ஆரணி சட்ட மன்றத் தொகுதிக் குட்பட்ட சைதாப்பேட்டை, மருசூா், சித்தேரி, சங்கீதவாடி, கொருகாத்தூா், கீழ்நகா், கண்ணமங்கலம் ஆகிய இடங்களில் மகளிா் அணி, இளைஞா்-இளம் பெண்கள் பாசறை, மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளா் ஜெயசுதா லட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளா் அ.கோவிந்தராசன், நகர கழக செயலாளா் அசோக்குமாா், நகர மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, ஒன்றிய கழக செயலாளா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஜெயப்பிரகாஷ், அரங்கநாதன், பேரூராட்சி செயலாளா் பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளா் அரையாளம் எம்.வேலு, முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் ஏ.ஜி.ஆனந்த், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment