Skip to main content

வங்கக்கடலில் புயல் 3-ந்தேதி சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு

வங்கக்கடலில் புயல் 3-ந்தேதி சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்பு

வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு பருவமழை பெய்யவில்லை.

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போதுமான அளவு மழை பொழிவு இல்லை.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 32 செ.மீ. மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும்.

பருவமழை காலத்தில் இதுவரையில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி மட்டுமே உருவாகி மழையை கொடுத்து உள்ளது. காற்றின் மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியால் பருவமழை பெய்து வந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அதன்பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி அதிகாலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் படிப்படியாக புயலாக வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதிதாக உருவாகும் புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும்.

வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. புயலின் கூர்முனை சென்னையை நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 2-ந்தேதி புயல் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் தாமதமாக 3-ந்தேதி உருவாகிறது.

புயலையொட்டி வட தமிழகம் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்ட நிர்வாகமும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.

வங்கக்கடலில் புயலுக்கான வலுவான சூழல் நிலவி வருவதால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

டிசம்பர் 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 2 மற்றும் 3-ந்தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

புயல் சின்னம் வலுவடைகின்ற நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் சூறாவளி காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 40 கி.மீ. வேகத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும். டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் ஆழ்கடலுக்கு சென்றவர்கள் இன்று (30-ந்தேதி) மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...