Skip to main content

"தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல" - அமைச்சர் எ.வ.வேலு

"தொழிற்சாலைகள் வந்தால் தான் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் விவசாயிகளை வஞ்சிப்பது நோக்கமல்ல" - அமைச்சர் எ.வ.வேலு  

திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

"விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது.

வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஒரு ஆணி செய்கின்ற தொழிற்சாலை கூட இங்கு கிடையாது. திருவண்ணா மலை மாவட்டம் என்பது விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வேண்டும் என்று பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் சிப்காட்டிற்காக 3 கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது 13 தொழிற்சாலைகள் வந்தது. குறிப்பாக அயல் நாட்டு தொழிற்சா லைகளும் வந்தன.

இதில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி தொகுதியை சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.

2-ம் கட்டமாக 1820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியினால் 55 தொழிற்சாலைகள் அங்கு வருகின்றன.

இதனால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவார்கள். இன்னும் அயல் நாட்டு தொழிற்சாலைகள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கு முயன்று வருகின்றார்.

3-வது கட்டமாக 1200 ஏக்கர் நிலம் கையப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஒரு தொழிற்சாலை கட்டினால் சுமார் அங்கு 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட 9 கிராமங்களில் இது குறித்து அரசின் சார்பில் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் 1881 விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்படுகிறது. அதில் 239 விவசாயிகள் தான் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அரசாங்கம் விவசாயிகளை பொருளாதார ரீதியாக நன்றாக வைத்து கொள்ள தான் எண்ணுகின்றது.

அதே நேரத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றது. இதில் சிலர் பேர் மட்டும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை தூண்டும் விதமாக அரசாங்கம் எந்த வேலையும் செய்ய கூடாது என்று நினைக்கிறார்கள்.

அரசு விவசாயிகள் நிலங்களை அபகரிக்கின்றது என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கின்றனர். விவசாயிகளை வஞ்சிப்பதோ, விவசாயிகள் நிலத்தை அபகரிப்பதோ இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல"

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளவர்க ளின் குடும்பத்தினர் உடனிருந்தனர்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...