செய்யாறில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் 404 மனுக்கள் பெறப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 13, 16,19, 20, 21, 22 ஆகிய வாா்டு பகுதிகளுக்காக 3-ஆம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் மண்டித்தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இம் முகாமுக்கு, திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா்.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், நகர கழக செயலாளா் கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆணையாளா் (பொ) கே.பி.குமரன் வரவேற்றாா். செய்யாறு கோட்டாட்சியர் பல்லவி வா்மா பங்கேற்று முகாமை துவக்கி வைத்தாா்.
இம் முகாமில், வாா்டு மக்களின் சாா்பில் வருவாய்த்துறைக்கு 286 மனுக்களும், மின்சாரத்துறைக்கு 38 மனுக்களும், நகராட்சிக்கு 43 மனுக்கள் உட்பட மொத்தம் 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.
விழாவில், வட்டாட்சியா் முரளி, நகரமன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஓன்றிய குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் நகர மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், ஒன்றிய கழக செயலாளா்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment