Skip to main content

செய்யாறு: வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் கு.பிச்சாண்டி

செய்யாறு: வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் கு.பிச்சாண்டி 

தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு தனியாா் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 37,247 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நேற்று நடைபெற்ற விழாவில் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நேற்றைய தினம் நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குனருமான எம்.எஸ்.தரணிவேந்தன் வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பா.அ.சையத் சுலைமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) இர.தேவேந்திரன் வரவேற்றாா்.

முகாமில் சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பங்கேற்று, தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

"தமிழகத்தில் உள்ள இளைஞா்களின் நலனை கருத்தில் கொண்டு, கலைஞரின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் வேலைவாய்ப்பு துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 90 தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 436 மாற்றுத்திறனாளிகள் உட்பட 37,247 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்

செய்யாறில் நேற்று நடைபெற்ற 91-ஆவது சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 102 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 2,156 போ் கலந்துக் கொண்டதில் 549 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷிணி, கூடுதல் ஆட்சியா் ரிஷப், கோட்டாட்சியர் பல்லவி வர்மா நகர மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா்(அனக்காவூா்), த.ராஜி(வெம்பாக்கம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி, ஒன்றிய கழக செயலாளா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், எம்.தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...