செய்யாறு: முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்.107வது பிறந்தநாள் விழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வி.முனுசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் என்.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது
செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருகாவூர்
எம்.அரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் 500 பேருக்கு வழங்கப்பட்டது மேலும் கழக நிர்வாகிகளுக்கு வேட்டி சேலைகள் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன
உடன் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வர்த்தகர் அணி பூக்கடை கோபால் ஒன்றிய கழக செயலாளர்கள் சி.துரை வயலூர் ராமநாதன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருள் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாராசூர் பெருமாள் செய்யாறு நகர கழக செயலாளர் கே.வெங்கடேசன் அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...
Comments
Post a Comment