வந்தவாசி: ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இந்தியாவும் குடியரசும் சிறப்பு உரையரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் குடியரசு தினத்தையொட்டி 'இந்தியாவும் குடியரசும்' என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இரும்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, பூங்குயில் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, வழக்கறிஞர் சா.ரா.மணி பங்கேற்று இந்தியாவும் குடியரசும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சட்டக்கல்லூரி பேராசிரியர் க.முத்துப் பெருமாள் கல்வி உரிமைச் சட்டம் பற்றி விளக்கினார்.
மேலும் பேச்சு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதுகலை ஆசிரியர்கள் வெங்கடேசன் அஜீத் குமார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் க. பூபாலன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment