Skip to main content

கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது

முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார்.

இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார் மம்தா.

ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது விபத்து நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தினார்.

4 முதல் 5 பேர், தன்னை காரை நோக்கி தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என மம்தா குற்றம்சுமத்தினார்.

அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.. மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய முதல்வர் ஸ்டாலின் விருப்பம்!

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பர்த்வானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்பு காரில் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் கான்வாய் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக மற்றொரு கார் குறுக்கே வந்தது. திடீரென எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க, மம்தா பானர்ஜியின் கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார்.

சடன் பிரேக் போட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றி, வேகமாக மோதியது. இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. எனினும், உடனடியாக காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பினர். இந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,

"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவாக உடல் நலம் தேற விழைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...