கார் விபத்தில் சிக்கிய முதலமைச்சர் மம்தா.. மேற்குவங்கத்தில் பரபரப்பு..!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது
முதலமைச்சர் மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டுள்ளார்.
இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லவிருந்தார் மம்தா.
ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால், சாலை மார்க்கமாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், சாலையில் செல்லும்போது விபத்து நடந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தினார்.
4 முதல் 5 பேர், தன்னை காரை நோக்கி தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது. இது, பாஜகவின் திட்டமிட்ட சதி என மம்தா குற்றம்சுமத்தினார்.
அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.. மம்தா பானர்ஜி விரைந்து குணமடைய முதல்வர் ஸ்டாலின் விருப்பம்!
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பர்த்வானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்பு காரில் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் கான்வாய் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக மற்றொரு கார் குறுக்கே வந்தது. திடீரென எதிரே வந்த காரில் மோதாமல் இருக்க, மம்தா பானர்ஜியின் கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டார்.
சடன் பிரேக் போட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றி, வேகமாக மோதியது. இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. எனினும், உடனடியாக காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பினர். இந்த விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந் நிலையில் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,
"மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். காயமடைந்த அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவாக உடல் நலம் தேற விழைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment