Skip to main content

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு!

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக முடிவு!

நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பீகார் பாஜக எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பீகாா் சட்டப் பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு 122-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமார் தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் இன்று வழங்கினார்.

மேலும், இன்று மாலையே பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் செளத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாட்னா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பாஜகவின் நிபந்தனைகளுக்கு பச்சைக்கொடி? கூட்டணியில் இருந்து விலகும் நிதிஷ்?

இன்றே ராஜினாமா?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக மீண்டும் பதவியேற்பார் என கூறப்படுகிறது.

பீகாரில் பாஜக உடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த 2022 ம் ஆண்டு அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார்.

இந் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில். நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும், பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக ஆதரவில் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார்?

வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களின்படி, 'நிதிஷ்குமார் இன்று பீகார் ஆளுநரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

அதே நேரம், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜகவின் ஆதரவுடன் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

இதற்காக இன்று மாலை ஆளுநரை சந்திக்க, நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார்' என கூறப்படுகிறது.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சென்று சந்தித்து, I.N.D.I.A. கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம்?

நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு நான்கு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் விகிதம், பாஜகவிற்கு பதவி வழங்க வேண்டும். அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் வகித்து வரும் அமைச்சர் பதவிகள் பாஜகவினருக்கு வழங்க வேண்டும்.

இரண்டு முதலமைச்சர்கள் உடன் சபாநாயகர் பதவியையும் பாஜகவை சேர்ந்த நபருக்கு ஒதுக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு தேர்தலில் 12-15 தொகுதிகள் மட்டுமே நிதிஷ்குமார் கட்சிக்கு ஒதுக்கப்படும்' ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, துணை முதலமைச்சராக சுஷில் மோடியை பாஜக தேர்வு செய்ய வேண்டும் என, நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி மாறுவது ஏன்?

தான் முன்னின்று உருவாக்கிய எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் தான், நிதிஷ்குமார் மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஜனநாயகத்தை காக்க நினைப்பவர்கள் அவசரப்பட்டு மனம் மாறக்கூடாது என, நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்று, நிதிஷ் குமார் I.N.D.I.A. கூட்டணியில் இருந்து வெளியேறக் கூடாது என, அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...