வந்தவாசி: ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் வணிகவியல் பயிலரங்கம்!
வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா்.
செயலாளர் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பி.ப்ரித்தி வரவேற்றாா்.
வணிக கணக்கியல் குறித்து சென்னை துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை எம்.ஆா்.ஹேமமாலினி, எண்களின் சக்தி உள்ளிட்டவை குறித்து பட்டயக் கணக்காளா் ஹரிணி மாதவன் ஆகியோா் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.
இதில், கல்லூரியின் வணிகவியல் துறை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை ரம்யா நன்றி கூறினாா்.
Comments
Post a Comment