Skip to main content

நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்.. தமிழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு!

நெருங்கும் பாராளுமன்ற தேர்தல்.. தமிழகத்தில் நடைபெறும் ஏற்பாடுகள் - தலைமை தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு!

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் 3 துணை தேர்தல் ஆணையர்கள் கொண்ட குழுவினர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழுவினரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேர்தல் ஆணையர்கள், மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினர்.

இன்று பிப்ரவரி 23 ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரையில் மீனம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் குறித்து கருத்துக்களை கேட்டு அறிகின்றனர்.

பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன் பின் நாளை 24 ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

காலை 11 மணியிலிருந்து பகல் 1 மணி வரை வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்துகின்றனர்.

அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இதற்கு பின்செய்தியாளர்களை சந்தித்து பேசுகின்றனர்.

இந்த ஆலோசனையின் போது தமிழ்நாட்டில் ஒரே நாளில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பது. அதற்கு எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்? துணை ராணுவ படை பாதுகாப்புக்கு எங்கெல்லாம் தேவை? தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறதா? அமைதியான, நேர்மையான முறையில், தேர்தலை நடத்தி முடிப்பது எப்படி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 2 நாள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு பிப்ரவரி 24, நாளை  மாலை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...