Skip to main content

ஆரணி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை!

ஆரணி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை!

ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சரிடமும், ஆரணியில் இருந்து புதிய விரிவாக்க பூட்டுதாக்கு சி.எம்.சி மருத்துவமனைக்கு செல்ல, அரசுப் பேருந்து இயக்கவேண்டும் எனவும்  போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆரணியில் செய்தியாளா்களிடம் பேசுகையில்:-

"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்ட மன்றத் தொகுதியில் ஆரணி நகரம், வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் ஆரணி மையப் பகுதி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மேலும், ஆரணி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து சேத்துப்பட்டு சாலையில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆரணி மண்டி வீதி வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது.

இதனால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்காடு - விழுப்புரம் சாலை பிரியும் புறவழிச் சாலைப் பகுதியில் புதிய சாலை அமைத்து மண்டி வீதிக்குச் செல்லாமல் ஏற்பாடு செய்யவேண்டும்.

ஆரணி நகரத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத்தாக்கு பகுதியில் புதிதாக அமைந்துள்ள வேலூா் சிஎம்சி மருத்துவமனை விரிவாக்கத்துக்கு, ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தினமும் செல்கிறாா்கள்.

எனவே, ஆரணி முதல் பூட்டுத்தாக்கு வரை ஒரு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.

ஆரணி தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லாததால், மாணவா்கள் வேலூா், செய்யாறு, திருவண்ணாமலை, வாலாஜா ஆகிய இடங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் சென்று பயின்று வருகின்றனா்.

இக்கல்லூரிகளுக்குச் செல்லவேண்டும் என்றால் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். முறையாக பேருந்து வசதி இல்லாமல் மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்" என தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...