Skip to main content

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப்

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை - கலீபா சாஹிப் 

"மிகவும் தொன்மையான, நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சக் கணக்கான மக்கள் பயனடைவார்கள். உலகெங்குமிருந்து மக்கள் தினமும் நாகூர் வருகை புரிகிறார்கள் எனவே நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும்" என மீண்டும் நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாகை பாரளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இதே கோரிக்கையை அனுப்பி பாராளுமன்றத்தில் இதனை பேசிட கோரியுள்ளார். நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைக்கு தொடர் அழுத்தம் கொடுத்து இதனை சாத்தியமாக்கி தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு துவக்கியுள்ள அம்ரித் பாரத் திட்டத்தினை, இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அதாவது எஸ்கலேட்டர் வசதி,  மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நடைமேடைகள் மேம்படுத்தப்படுத்துதல், 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்குதல், காத்திருக்கும் அறைகள் அமைப்பு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந் நிலையில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் என அந்த பணிகளை பிரதமர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 55 ரயில் நிலையங்களும், பிகார் மாநிலத்தில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்க மாநிலத்தில் 37, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 34, அசாம் மாநிலத்தில் 32, ஒடிசா மாநிலத்தில் 25, ஆந்திரா மாநிலத்தில் 18, ஹரியானா மாநிலத்தில் 15, கர்நாடகா மாநிலத்தில் 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.

மேற்குறிப்பிட்ட 508 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிபூண்டி, அரக்கோணம், விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், போத்தனூர், நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ரயில் நிலையமும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...