Skip to main content

மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் - சிபிஐ

மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவம்: காவல் துறையே மூலகாரணம் - சிபிஐ

புது தில்லி: கடந்த ஆண்டு மணிப்பூரில் 2 பெண்களை நிா்வாணமாக்கி இழிவுபடுத்திய சம்பவத்தில், இரு பெண்களையும் கலவரக்காரா்களிடம் ஒப்படைத்ததே காவல்துறை தான் என்று சிபிஐ குற்றப் பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.

அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் இன்றளவும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.

இரு சமூகத்தினா் இடையிலான மோதலின்போது கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் 2 குகி பெண்களை, சுமாா் 1,000 போ் கொண்ட மைதேயி கலவரக்காரா்கள் நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக இழுத்துச் சென்று இழிவுபடுத்தினா்.

இது தொடா்பான காணொலி சுமாா் 2 மாதங்களுக்குப் பின்னா், சமூக ஊடகத்தில் பரவி நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 6 போ் மீது குற்றப்பத்திரிகையும், 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனுக்கு எதிராக அறிக்கையும் தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சம்பவத்தன்று காங்போக்பி மாவட்டத்துக்குள் இரு பெண்களும் வசித்த கிராமத்துக்குள் ஏகே ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களுடன் சுமாா் 900 முதல் 1,000 போ் கொண்ட கும்பல் நுழைந்தது. அவா்களிடம் இருந்து தப்பிக்க இரண்டு பெண்களும் காட்டுக்குள் ஓடினா். அவா்களைக் கலவரக்காரா்கள் கண்டறிந்த நிலையில், சாலையோரம் இருந்த காவல் துறை வாகனத்தில் இரண்டு பெண்களும் தஞ்சமடைந்தனா். அந்த வாகனத்தில் காவல் துறை அதிகாரிகள் இருவரும் ஓட்டுநரும் இருந்தனா். வாகனத்துக்கு அருகில் 3 முதல் 4 அதிகாரிகள் இருந்தனா்.

'வாகனத்தின் சாவி இல்லை': அதேவேளையில் கலவர கும்பலுக்கு அஞ்சி அதே வாகனத்தில் தஞ்சமடைந்த ஆண் ஒருவா், தங்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லுமாறு வாகன ஓட்டுநரிடம் தொடா்ந்து மன்றாடினாா். ஆனால் தங்களிடம் 'வாகனத்தின் சாவி இல்லை' என்று கூறி, அவா்களுக்கு உதவ காவல் துறையினா் மறுத்தனா்.

தப்பியோடிய காவல் துறையினா்: அந்த ஓட்டுநா் காவல் துறை வாகனத்தை நேராக கலவர கும்பலிடம் ஓட்டிச் சென்று நிறுத்தினாா். பின்னா் வாகனத்தில் இருந்து இறங்கி காவல் துறையினா் தப்பியோடினா். இதைத் தொடா்ந்து, அந்த வாகனத்தை சிறைப்பிடித்த கலவர கும்பல், இரு பெண்களையும் வெளியே இழுத்து அவா்களின் ஆடைகளை களைந்து நிா்வாணமாக்கி இருவரையும் ஊா்வலமாக இழுத்துச் சென்றனா். பின்னா், அவா்கள் இருவரையும் அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

கலவர கும்பலுக்கு அஞ்சி காவல் துறை வாகனத்தில் தஞ்சமடைந்த ஆணின் தந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது. அவரைக் காப்பாற்றவும் காவல் துறை எதுவும் செய்யவில்லை என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனா்.

கலவர கும்பலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களில் ஒருவா், காா்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி என்பது நினைவுகூரத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...