Skip to main content

"பிரதமராக ராஜிவ் காந்தி இருந்தார் அவரது உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன்.தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார்" - பிரியங்கா காந்தி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது.

இந் நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் மேற்க்கொண்டார்

வல்சாட், தரம்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்,

"எனது குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல, பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆம், இந்திரா காந்தி அவர்களில் ஒருவர். அவர் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தார். ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தார். இறந்த பிறகு, அவரின் உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன். அவரும் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார்" என பிரியங்கா காந்தி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மன்மோகன் சிங் இந்த நாட்டில் புரட்சியைக் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டிப் பார்த்தால், குறைந்தபட்சம் நாகரீகமான மனிதராக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்தார். உங்களிடம் இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் (மோடி) என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

மக்கள் முன்னிலையில் பேசுகிறேன், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கூட அவர் நினைப்பதில்லை. இப்போது விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரிக்கிறார். காங்கிரஸார் எக்ஸ்ரே இயந்திரத்துடன் உள்ளே நுழைவார்கள், உங்கள் ஆபரணங்கள் மற்றும் தாலியை பறித்து வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் கூறுகிறார்.

இது உண்மையா? இது சாத்தியமா? நமது நீதி (தேர்தல்) அறிக்கையில் அவருக்கு என்ன பிரச்சனை? அவரது நம்பிக்கை குலைந்ததா? தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களை வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஏனெனில், அது அரசியலமைப்பைத் திருத்த விரும்புகிறது. ஆளும் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதை எல்லாம் மறுக்கிறது. ஆனால், ஆட்சி வந்த பின்பு, தனது திட்டத்தை செயல்படுத்தும். இது அவர்களின் தந்திரம். அவர்களின் திட்டம். ஜனநாயகத்தையும் மக்களையும் வலுவிழக்கச் செய்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள்" என்றார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...