Skip to main content

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

காரல் மார்க்சின் 206-வது பிறந்தநாள் விழா செங்குடை பேரணி மற்றும் பயிலரங்கம் திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து மார்க்ஸ் உருவம் பதித்த செங்குடை பேரணி புறப்பட்டது. வேலூர் சாலை வழியாக சென்று, பயிலரங்கம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.

இதையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது.

மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் நோக்க உரையாற்றினார்.

இந்திய நாட்டுக்கு வழிகாட்டும் மார்க்சியம் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மார்க்சிய விஞ்ஞானமும் புரட்சிகளின் வரலாறு என்ற தலைப்பில் மாநில குழு உறுப்பினர் இரா.சித்தன், இந்தியாவை பற்றி மார்க்ஸ் என்ற தலைப்பில் தமிழ்நாடு தேசிய பல்கலைக் கழக திருச்சி முனைவர் பி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காசா மீதான போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் கடந்த 24-ம் தேதி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் உருவாக்கப்படும் மனிதத் துயரத்தை நிறுத்த 15 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், 'இஸ்ரேல் உடனடியாக தனது தாக்குதலை நிறுத்த வேண்டும், காசாவில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளது.

மேலும் இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சர்வதேச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இஸ்ரேல் தனது இன அழிப்புப் போரைத் தொடர்கிறது. சர்வதேச நீதிமன்ற உத்தரவால் கொக்கரித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலை மீண்டும் தூண்டிவிட்டு, இனப்படுகொலையை தொடர்ந்து நிகழ்த்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்தத் தீர்மானத்தை, வீட்டோ அதிகாரத்தின் மூலம் பலமுறை செயலிழக்கச் செய்து, தன்னுடைய வன்மத்தைக் காட்டுகிறது

அமெரிக்கா.இந்தியாவின் நீண்ட கால பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு, பாஜகவின் வெளியுறவு கொள்கையால் திசை மாறிப்போனது. பேரழிவைச் சந்தித்து வரும் பாலஸ்தீனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பேராதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்ரேலின் இன அழிப்புப் போரை நியாயப்படுத்த முடியாது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்.பாலஸ்தீன மக்களை பாதுகாக்க, நிவாரணைப் பணிகளை முடுக்கிவிட, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து நாடுகளையும் வலியுறுத்துகிறோம்.

இந்திய அரசு நிலையில் மாற்றம் கண்டு, பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஜூன் 2-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...