Skip to main content

"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

"மொகலாய மன்னர் ஔரங்கசீப் வழியை பின்பற்ற விரும்புவோர் மீது புல்டோசர் நடவடிக்கை பாயும்" - உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஔரங்கசீப்பின் ஆன்மா காங்கிரஸ் கட்சியை ஆட்கொண்டுள்ளதாகவும், தலிபான் மற்றும் ஷரியா நெறிமுறைகளை இந்தியா முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார்.

இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்

"காங்கிரஸின் தேர்தல் அறிக்கை என்பது முஸ்லிம் லீக்கின் ஆவணம்.ஜிஸ்யா வரிக்கு இணையான வரியை விதிக்க முயல்கிறார்கள். நாட்டில் ஷரியா சட்டத்தை திணிக்கவும், தலிபான் முறையை அமல்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள். இது நடந்தால், பெண்கள் பள்ளி உட்பட எங்கேயும் செல்ல முடியாது; அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் பாதையை பின்பற்றுபவர்கள் தனது புல்டோசர் மூலம் 'கையாளப்படுவார்கள்' என்றும் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோகத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

"ராமர் இப்போது அயோத்தியில் உள்ள தனது தெய்வீக கோவிலில் அமர்ந்துள்ளார். உலகம் முழுவதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்த போது, ​​காங்கிரஸ் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. அயோத்திக்கான அழைப்பையும் நிராகரித்தது.

இப்போதும் கூட, ராமர் கோயில் கூடாது என்னும் அவர்களின் தலைவர்கள், ராமருக்கு கோயில் என்பதே பயனற்றது என்றும் கூறுகிறார்கள்" என மேலும் ஆதித்யநாத் சாடினார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியக் கூட்டணியை சீண்டிய யோகி ஆதித்யநாத், 'அவர்களால் தங்களையே ஒன்றிணைக்க முடியவில்லை. பிறகெப்படி நாட்டை எவ்வாறு ஒருங்கிணைப்பார்கள்?' என கேள்வி எழுப்பினார்.

"அதிகாரத்திற்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்குவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு வழங்க நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சார் கமிட்டியை அமைத்தார்கள். அவற்றை நாங்கள் அப்போதே எதிர்த்தோம்" என்றும் யோகி ஆதித்யநாத் மேலும் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...