தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொன்விழா தொடக்கக் கூட்டம்
கிளைத் தலைவர் பூங்குயில் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சங்க துணைத்தலைவர் கவிஞர் தமிழ்ராசா, துணைச்செயலாளர் எம்.பி.வெங்கிடேசன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் த. சாந்தி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவர் முத்துவேலன் படைப்பு-பண்பாடு-கருத்துரிமை என்று பொன்விழா மாநாடு முன்னெடுக்கும் கருப்பொருள் குறித்து சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர்களான பெ.அரிதாசு,சோலை. பழனி, என்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
சோலை.பழனி பொன்விழா கொண்டாட்டத்தை வாழ்த்தி பேசினார்.
கவிக்கோ அபதுல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிஞர் தமிழ்ராசா பாராட்டி கெளரவிக்கப் பட்டார்.
நிகழ்ச்சியில்,வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கிடேசன், ஆசிரியைகள் ரசீனா,பூவிழி,வீனஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ரமேஷ்கண்ணன்,பாரதிமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக,கிளை பொருளாளர் ச. காசி நன்றி கூறினார் .
Comments
Post a Comment