ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வேடமிட்ட மாணவர்களுக்கு பரிசுகள்!
வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில்
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
பட்டதாரி ஆசிரியர்
மா. ரகுபதி, புலவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜவகர் சிறுவர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் பெ. பார்த்திபன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்
கோ. ஸ்ரீதர் பங்கேற்று" கீதை காட்டிய வழி" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பாடல்கள் மற்றும் நடனமாடிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பூங்குயில் சிவக்குமார், வானவில் மன்ற பொறுப்பாளர் நிவேதித, சமூக ஆர்வலர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணர் வேடமிட்ட மாணவர்களை பாராட்டி வந்தை டைம்ஸ் ஆசிரியர் அ. ஷாகுல் அமீது பரிசு பொருட்களை வழங்கினார்.
இறுதியில் எய்டு இந்தியா திட்ட மேலாளர் க. முருகன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment