வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது
இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன் தலைமை வகித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார்.
மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் பங்கேற்று ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி எழுச்சியுரை ஆற்றினார்.
தேசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
சி. இரவிச்சந்திரன், நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பெ. ஜெய்சங்கர், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் வெ. முருகன், தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்
எ. சக்திவேல், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ப. சக்ரவர்த்தி, தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ. சீனிவாசன், மும்முனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் து. நாதன் வேல், தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு, கீழ்ப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மா.எ. வாசுதேவன், சென்னாவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் த. சசிகலா, தென் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மு. பஷீரா, ஊராட்சி ஒன்றிய உருது தொடக்க பள்ளி ஆசிரியை ஏ. உமா, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை சி. மின்னிலா, தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் ஆ. சின்னதுரை, வீனஸ் வித்யாலயா பள்ளி ஆசிரியை ம. ரேவதி ஆகியோருக்கு ஞானகுரு விருது, சான்றிதழ், புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, தலைமை ஆசிரியை இரா. தேன்மொழி, பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல்.சிவக்குமார், கலைச் சுடர்மணி பெ. பார்த்திபன், காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, முதுகலை ஆசிரியர் க. பூபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் விருது பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.
நிகழ்வை வந்தவாசி ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்
கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் முதுகலை ஆசிரியர் எ. ராஜ்குமார் நன்றி கூறினார்.
மிகச்சிறப்பு
ReplyDelete