வந்தவாசி: கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு அதன் தலைவர் வி.கவிதா தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு ப.சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் எஸ்.எம்.சி உறுப்பினர்களின் முன்னிலையில் பேசிய ஆசிரியை தேன்மொழி பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமைகளை எடுத்துரைத்தார் இடைநிலை ஆசிரியர் வே.துரைராஜ் நன்றி கூற,
கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன "வரும் தீபாவளி பண்டிகையை மாணவர்கள் பாதுகாப்புடன் கொண்டாட அறிவுறுத்துவது எனவும் ஆறுதலை கிணறு அமைக்க வேண்டி வலியுறுத்தல் பள்ளியின் பெயர்ப்பலகை அமைத்தலுக்கான தொகை எடுத்துக் கொள்ள ஒப்புதல் பள்ளிக்கு அருகில் போதை பொருள் விற்பனை இல்லா பகுதியாக மாற்றுவது எனவும் அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியிலேயே சேர்க்க பெற்றோர்களை வலியுறுத்துவது" எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment