Skip to main content

ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!

ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

"திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் காரன் என்றிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சி, சமுதாய ஒற்றுமை, அனைத்து சமுதாயத்தைச் சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு இருக்கும் இயக்கம் ஆர்எஸ்எஸ்.

இட ஒதுக்கீட்டில் என்னுடைய பங்கு என்ன என திருமாவளவன் கேட்டிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு அருந்ததியின இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் பாஜக சார்பில் கலந்து கொண்ட அப்போதைய துணை தலைவர் சுப நாகராஜன் அறிக்கை ஒன்றை கொடுத்திருந்தார்.

அந்த அறிக்கையில், அருந்ததியின மக்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என ஒரு விவரம் இணைக்கப்பட்டது. அந்த விவரத்தையும் இளம் வழக்கறிஞராக இருந்தபோது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக நான்தான் எடுத்துக் கொடுத்தேன். உச்ச நீதிமன்றத்தில் சிறந்த தீர்ப்பை பெற்றதற்கு காரணம் எங்களது சட்ட ரீதியான போராட்டம் தான். திருமாவளவன் சொல்லியது போல சுலபமாக இந்த தீர்ப்பு கிடைக்கவில்லை.

ஹைதராபாத் தேர்தலின் போது பிரதமர் மோடி அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தருவதில் பெரிய அண்ணனாக இருந்து செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். இப்போது அதனை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். சமுதாயத்தில் கடைநிலையில் உள்ள மக்களுக்கும் அரசியல் அதிகாரம் வரவேண்டும் என்பதுதான் அந்தியோதையா கொள்கை.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது.

அதுமட்டும் அல்லாது, பாஜக ஒவ்வொரு கீழ்நிலையில் உள்ளவரையும் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என கொள்கையோடு இருக்கிறோம்.

ஒண்டிவீரனின் நினைவு தினத்தை அனைத்து கட்சியினரும் அனுசரிக்கின்றனர்.

மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி அவரது 251வது நினைவு தினத்தில் தபால் தலையை வெளியிட்டார். என்றாவது ஒருநாள் திருமாவளவன், ஒண்டிவீரனின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி இருக்கிறாரா?

மக்கள் நல கூட்டணியில் 25 இடங்களை திருமாவளவன் வாங்கினார். அதில் ஒரு இடத்தையாவது அருந்ததியினர் அல்லது தேவேந்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்திருக்கிறாரா? கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 இடங்கள் பெற்ற திருமாவளவன், அதில் ஏதாவது ஒரு இடத்தையாவது அருந்ததியின சமுதாயத்திற்குக் கொடுத்திருக்கிறாரா? இவருக்கு இட ஒதுக்கீட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

திருமாவளவன் பிரிவினை வாதத்தை ஆதரித்தும், சனாதனத்தை எதிர்த்தும் பேசுகிறார். சனாதனம், ஆன்மீகம், தேசியத்தை ஆதரிப்பவர்கள் பாஜகவினர். அருந்ததியின மக்கள் இட ஒதுக்கீடை பற்றி பேச துளியும் தகுதியற்றவர் திருமாவளவன்.

அருந்ததியின சமூகத்தின் இட ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த 12 ஆண்டுகளாக என்னுடைய பங்கு என்னவென்று சமுதாயத்திற்கு தெரியும். நான் ஆர்எஸ்எஸ் சங்கி என்பதில் பெருமைகொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...