வந்தவாசி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் உரையரங்கம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்!
வந்தவாசி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் உரையரங்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 93 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் "ஆகலாம் கலாம் " மாணவர்களுக்கான சிந்தனை அரங்கம் மற்றும் 101 மரக்கன்றுகள் வழங்கும் விழா பாலாம்பாள் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவை மரக்கன்றுகளை நட்டு வந்தவாசி நகர் மன்ற தலைவர் எச். ஜலால் தொடங்கி வைத்தார்.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.எஸ். குமார் தலைமை தாங்கினார்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, யுரேகா திட்ட மேற்பார்வையாளர் க.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு ரெட் கிராஸ் சங்க தலைவர் டாக்டர் ஏ.பி. மாதவன் பங்கேற்று, "ஆகலாம் கலாம்" என்ற தலைப்பில் கலாமின் வாழ்க்கை வரலாற்று நெறிகளை மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
மேலும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கவிஞர் அப்துல்லா, சமூக ஆர்வலர் தரணி, வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணை தலைவர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஐடிஐ ஆசிரியர் சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment