செய்யாறு:வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அரசுக் கட்டிடங்கள் எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்
செய்யாறு:வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அரசுக் கட்டிடங்கள் எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டன.
வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த ராந்தம் கிராமம் துரைராஜ் நகரில் ஊராட்சித் துறை சாா்பில் 2024 - 25ஆம் ஆண்டு மாவட்ட ஊராட்சி மாநில நிதிக் குழு மானியம் மூலம் ரூ.10.11 லட்சத்தில் புதிய நியாய விலை கடைக் கட்டடம், நாயந்தாங்கல் கிராமத்தில் 2023 - 24 ஆம் ஆண்டு திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், வடமணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.17.79 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம், கொடையம்பாக்கம் கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு திட்டத்தின் மூலம் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம், செய்யனூா் கிராமத்தில் இதே திட்டத்தின் மூலம் ரூ.9.45 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.
இந்தக் கட்டிடங்கள் கிராம மக்கள், மாணவா்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு பெருந்தலைவர் மாமண்டூர் டி.ராஜி தலைமை வகித்தார்
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, வடமணப்பாக்கம் கிராமத்தில் முத்தமிழ் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை, மற்றும் பரிசுகளை வழங்கினாா்
இந் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஒன்றியச் செயலாளர்கள் எம்.தினகரன் ஜேசிகே.சீனிவாசன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment