Skip to main content

மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் வெடித்த போராட்டம்! தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் வெடித்த போராட்டம்! தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

ஸ்ரீ பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ்

போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோல, சி.ஐ.டி.யு., தொழிலாளர்களை குறிவைத்து, ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அதேபோல நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் இணைய, தொழிலாளர்களை வற்புறுத்தி உள்ளது. தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் தொழிலாளர் ஒருவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் சாம்சங் நிர்வாகத்தின்  நடவடிக்கைகளை கண்டித்து வரும் 19-ம் தேதி சாம்சங் தொழிற்சாலைக்கு உள்ளேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் முடிந்து சுமுக சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு பின்னணியில் வேலைக்கு சென்ற தொழிலாளிகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டிற்கு எதிராக பல்வேறு விதமான பழிவாங்கள் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 35 க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட முன்னணி தோழர்களை அதிரடியாக இடமாற்றம் மற்றும் பொய் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு வருகின்றன.

நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற கமிட்டியில் சேருமாறு தொழிலாளர்களை மணிக்கணக்கில் கவுன்சிலிங் செய்கிற மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை தொடர்கின்றன. நிர்வாகத்தின் வற்புறுத்தலை ஏற்க முடியாத தொழிலாளர்கள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆதரவு பெற்ற கமிட்டிகள் மூலம் வசை சொல்லுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

மேற்கண்ட சூழலில் சுதாகர் என்கிற ஒரு தொழிலாளியை தொடர்ச்சியாக வற்புறுத்தி அவருக்கு விருப்பம் இல்லாத பகுதியில் கட்டாய இடமாற்றம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய காரணத்தினால் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொள்ள அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். தன்னுடைய மரணத்திற்கு நிர்வாகத்தின் அச்சுறுத்தலும் பழிவாங்கல் நடவடிக்கைகளே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார் தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உதவி செய்யவும் அவர் நிலைமை குறித்து கேட்டு அறியவும் பணியில் இருந்த சங்கத்தின் நிர்வாகிகளை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை. முதல் கட்டமாக வருகிற 19.12.2024 அன்று பகல் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் 1500 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் பிரச்சினையில் 6 வார காலத்திற்குள் முடிவெடுங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்ட பிறகும் தமிழக அரசும் தொழிலாளர் துறையும் இன்று வரையிலும் அது குறித்து சிறு துரும்பை கூட அசைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...