Skip to main content

"தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" - கே.பாலகிருஷ்ணன்

"தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" - கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் அனுதினமும் தலித் கொடுமைகள் நிகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, அவரது உருவசிலைக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

'தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால், அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் கைவிடப்பட்டு உள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் தூக்கிபிடித்திருக்கிற சமூக ஒற்றுமை, சாதிகளற்ற சமூகம், சமூக ஒடுக்குமுறை மற்றும் பெண் அடிமைத்தனத்தை முறியடிக்கும் உயர்ந்த நோக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூக்கி பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த பாதையிலேயே தமிழகம் பயணிக்க வேண்டும் என அரைகூவி அழைக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கவும், செயல்படுத்தவும் அனைவரும் திரண்டு வரவேண்டுமெனெ கேட்டுக் கொள்கிறேன்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே, இது திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாமும் மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றும் அரசு என சூளுரைத்து வருகிறது. ஆனால், ஆணவக் கொலைகள், கொலை, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவை திமுக ஆட்சியில் அதிகரித்து, சட்ட-ஒழுங்கு சிர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் ஓயவில்லை, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டினை, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே பேசியுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்க் கொலையின்போது, அரசியல் கட்சி தலைவர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளால், திமுக மற்றும்  விசிக கூட்டணியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக 25 தொகுதிகளை கேட்கும் என, அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் வன்னியரசு பேசியதும் பெரும் பேசுபொருளாகி, திமுகவை அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில் தான், திமுக ஆட்சியில் ஆணவக்கொலைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதாக சிபிஎம் தெரிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகளின் இந்த அதிரடி கருத்துகள், திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...