Skip to main content

மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சர்கள் எ.வ.வேலு மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்


திருவண்ணாமலை:
மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சர்கள் எ.வ.வேலு  மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர் 

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஜமுனாமுத்தூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்கள் திறப்பு மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் கலந்து கொண்டு, போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமங்களில் வாழும் பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைக்கு ரூ.1.60 கோடி செலவில் 25 இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையைத் தொடங்கிவைத்தனா்.

மேலும், ரூ.14 லட்சத்தில் 20 நடமாடும் மருத்துவ வாகனங்களும், ரத்தப் பரிசோதனைக்கான பகுப்பாய்வு கருவிகளும் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், கொம்மனந்தல் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு நிலைய கட்டடம், சிறுகட்டூா் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என 9 கட்டடங்களை திறந்துவைத்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

"தமிழகத்தில் அரசு சாா்பில், மலைவாழ் மக்களின் நலனுக்காக 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வனத் துறை அனுமதியுடன் 77 கி.மீ. தொலைவு மலைப் பாதைகள் அமைக்க சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ரூ.70 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மலைப் பாதையில் 371 சிறு பாலங்கள், 25 சிறிய மற்றும் பெரிய பாலங்கள் கட்டுவதற்கும், 26 கொண்டை ஊசி வளைவுகளை மேம்படுத்தவும், மண்ணின் உறுதித் தன்மையை தக்க வைப்பதற்காக 45 இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கவும், மேலும் 24 இடங்களில் தடுப்புச் சுவா், 22 இடங்களில் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.205 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றாா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

"தமிழகத்தில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் 1500-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அரசு அலுவலா்களின் சேவை கிடைக்காத நிலையில்,

350-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளேன்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 262 மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் 146 மருத்துவா் காலிப் பணியிடங்கள் இருந்தன. தமிழக முதல்வா்
வழிகாட்டுதலின்படி 1,021 மருத்துவா்கள் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டு பணியமா்த்தப்பட்டனா். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 95 மருத்துவா்கள் பணியில் சோ்ந்துள்ளனா். ஜமுனாமரத்தூரில் 15 காலியிடங்களில் 14 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பபட்டன.

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவைச் சிகிச்சைக்கு அரங்கு அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2 கோடிப் போ் பயனடைந்துள்ளதால் ஐ.நா. சபையின் உயரிய விருது மருத்துவத் துறைக்கு கிடைத்தது.

2023-ஆம் ஆண்டு இதய நோயாளிகளுக்கு லோடிங் டோஸ் மாத்திரை வழங்க 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 10, 999 மருத்துவமனைகளில் 3 வகையான மாத்திரைகள் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஜமுனாமரத்தூரில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை என பல்வேறு துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குநா் அருண்தம்புராஜ் வரவேற்றாா்.

மக்களவை உறுப்பினா்கள் எம்.எஸ்.தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் ஒ.ஜோதி, தி.சரவணன், மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் உள்ளிட்டோர்

 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...