Skip to main content

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா: கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை சிறப்பம்சங்கள்!

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா: கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை சிறப்பம்சங்கள்!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதன் சிறப்பம்சமாக, திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில், ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரிக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் 'விவேகானந்தா' படகில், கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்றார்.

அவரை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.

சிலையின் நுழைவுவாயிலில் 'பேரறிவு சிலை' (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் வழியே விவேகானந்தர் பாறை வரை நடந்து சென்ற முதல்வர், மீண்டும் பாலம் வழியாக திருவள்ளுவர் பாறைக்கு திரும்பினார். அமைச்சர்கள், பிரமுகர்களும் உடன் சென்றனர். பின்னர், திருவள்ளுவரின் பாதத்தில் முதல்வர் மலர் தூவி வணங்கினார். அங்கிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் கடலின் இயற்கை அழகை ரசித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

சிலையின் பீடம் அருகே நடந்த நிகழ்ச்சியில், திருக்குறள் அறநெறியை பரப்பி வரும் 25 தமிழ் ஆர்வலர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்.

மாலை 6 மணி அளவில் கரை திரும்பிய முதல்வர், பூம்புகார் போக்குவரத்து கழக வளாகத்தில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்டார். படகு இல்ல வளாகத்தில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளிக்காட்சியை திறந்து வைத்தார். இரவு 7 மணி அளவில், கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகை அருகே சுகிசிவம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தார்.

துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ராசா,தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய முதல்வர், இன்று நடைபெறும் 2-வது நாள் விழாவில் பங்கேற்கிறார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீடு, 'தினம் ஒரு திருக்குறள்' என்ற நூலின் புதிய பதிப்பு வெளியீடு, திருவள்ளுவர் பசுமை பூங்கா, திருக்குறள் கண்காட்சி திறப்பு விழா, திருவள்ளுவர் அலங்கார தோரண வாயில் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...