Skip to main content

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை: கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், கோவிட் காலத்தில் பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண சலுகையை மீண்டும் தரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் ஒன்றிய அரசு தரமறுக்கிறது.
இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் நாளிதழில் இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?

நான் நாடாளுமன்றத்தில் 2021 – 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என்ற கேள்வியை (231/13.12.2024) எழுப்பி இருந்தேன். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில் மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தரப்படவில்லை. மாறாக 2021 நிதியாண்டில் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த பயணிகள் 2230 கோடி முறை பயணித்துள்ளனர் என்று பதில் அளித்துள்ளார்.

2022 – 23 ஆம் ஆண்டில் பயணிகளின் கட்டண சலுகையாக 57 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது சராசரியாக ரயில்வே கட்டணத்தில் 46 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேள்வியின் நோக்கமே மூத்த குடிமக்கள் செய்கிற ரயில் பயணங்களின் விவரங்களை பெறுவதும், கோவிட் காரணத்தை பயன்படுத்தி திரும்ப பெறப்பட்ட மூத்த குடிமக்களின் ரயில் கட்டண சலுகைகளின் காரணமாக எவ்வளவு தொகை அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என்பதை அறிவதற்குதான். ஆனால் அமைச்சரோ வேண்டுமென்றே அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொத்த பயணிகள் எவ்வளவு, மொத்த மானியம் எவ்வளவு என்று கணக்குத் தந்துள்ளார்.

எல்லோருக்குமான மானியத்தைக் கடந்துதான் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது.

ஆகவே அரசு இந்த கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச் சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது.

சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முடியாது; மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.
அதே நேரம்,
இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் நாளிதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற இரயில்வே அமைச்சகம். பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது? அதுமட்டுமல்ல,
பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...