40 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி வரும் முனைவர் வி.முத்து அவர்களுக்கு உலக சாதனையாளர்சான்றிதழ் வழங்கும் விழா!
40 ஆண்டுகள் தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி வரும் முனைவர் வி.முத்து அவர்களுக்கு உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கும் விழா!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மனும்,புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கலைமாமணி முனைவர் வி.முத்து தலைவராக உள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தா ஐ.டி.ஐ யில் 40 ஆண்டு தொடர்ந்து குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி உலக சாதனை புரிந்தமைக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நிகழ்வு இராஜா நந்திவர்மன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில், புதுவை தமிழ் சங்க நிர்வாகிகள்,கல்லூரி தாளாளர்கள்,கல்லூரி இயக்குநர்கள், பேராசிரியர்கள்,பேராசிரியைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உலக சாதனையாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கட்கு வாழ்த்துரை வழங்கினர் தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
Comments
Post a Comment