அனக்காவூர்: மேல்நெமிலி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினம்
திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியம் மேல் நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கிருஷ்ணவேணி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் தலைவர் சோலை முன்னிலை வகித்தார் பள்ளி ஆசிரியை அப்ரின் பானு, மூத்த பட்டதாரி ஆசிரியை மீனா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் தலைமையாசிரியை இரா.தேன்மொழி தேசியக்கொடியினை ஏற்றினார்.
இவ்விழாவில், ஜே.ஆர்.சி மாணவர்கள் அணிவகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது
மாணவர்கள் குடியரசு சார்ந்த பேச்சு, கவிதை, வீர சாகசங்களில் தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பணி மேற்பார்வையாளர் சுஜாதா அவர்கள் எழுதுபொருட்களை வழங்கினார். மேலும்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிறைவாக ஆசிரியை ரம்யா நன்றி கூறினார்
Comments
Post a Comment