இந்திய குடியரசு தினம்: நாகூர் தர்காவில் கோலாகல கொண்டாட்டம்!
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
400 ஆண்டு கால பழமையான பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மகாராஜாவில் கட்டித் தரப்பட்ட நாகூர் தர்கா பெரிய மினரா முழுவதும் இந்திய அரசின் மூவர்ண கொடி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது, அதை போல் நாகூர் ஆண்டவர் சமாதியின் நேர் மேல் உள்ள தங்க கலசமும் இந்திய அரசு மூவர்ண கொடியின் நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. நாகூர் தர்கா அலங்கார வாசலில் அமைந்துள்ள தர்கா அலுவலகம் முன்பு வழக்கம்போல் இந்திய அரசின் மூவர்ண கொடி ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப் அவர்களால் ஏற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி புனித பாத்திஹா ஓதி, பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. நாகூர் தர்காவில் உள்துறை பாதுகாவலர்கள், தர்கா அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கொடி வணக்கம் செலுத்தினர்.இதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது
இந் நிகழ்வில், நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் சுல்தான் கலீபா சாகிபு, ஹாஜா மொய்தீன் சாஹிப் புனித துவா ஓதினார். முன்னாள் மானேஜிங் டிரஸ்டிகள் அபுல் பதஹ் சாகிப், ஷேக் ஹசன் சாகிப் ஆகியோர் நிகழ்வை தலைமை ஏற்று நடத்தினர்.
Comments
Post a Comment