Skip to main content

"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர், கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"-மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்

"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர்
இவர்களுக்கு கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"-
மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்டம்
செய்யார் நகரில்,
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்,பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது

அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற இந் நிகழ்வில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு படிப்புக்களை பயின்ற  இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களுக்கு கல்வி தகுதிக்கு கேற்றவாறு நேர்காணல் மூலம் அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். திட்ட இயக்குநர் சரண்யா தேவி வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் தலைமையுரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்,
'நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் - இளம் பெண்கள் தான் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு படிப்புடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தனியார் துறைகளும் இளைஞர்கள் - இளம் பெண்களின் தகுதிக்கு ஏற்றவாறு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பையும் வழங்க முன் வரவேண்டும்,' என குறிப்பிட்டார் உடன் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி கோட்டாட்சியர் பல்லவி வர்மா கல்லூரி முதல்வர் கலைவாணி உதவி இயக்குநர் க.காந்தி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் த.மோகன்ராஜ் நன்றியுரையாற்றினார்

b
 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...