"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர், கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"-மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்
"நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர்
இவர்களுக்கு கல்வியுடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும்"-
மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ்
திருவண்ணாமலை மாவட்டம்
செய்யார் நகரில்,
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்,பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது
அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற இந் நிகழ்வில்,ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு படிப்புக்களை பயின்ற இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்துக் கொண்டனர்.
இவர்களுக்கு கல்வி தகுதிக்கு கேற்றவாறு நேர்காணல் மூலம் அந்தந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர். திட்ட இயக்குநர் சரண்யா தேவி வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் தலைமையுரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்,
'நாட்டில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் - இளம் பெண்கள் தான் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு படிப்புடன் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தனியார் துறைகளும் இளைஞர்கள் - இளம் பெண்களின் தகுதிக்கு ஏற்றவாறு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பையும் வழங்க முன் வரவேண்டும்,' என குறிப்பிட்டார் உடன் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி கோட்டாட்சியர் பல்லவி வர்மா கல்லூரி முதல்வர் கலைவாணி உதவி இயக்குநர் க.காந்தி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் த.மோகன்ராஜ் நன்றியுரையாற்றினார்
Comments
Post a Comment