வந்தவாசி: ஓசூா் மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் 456 பயனாளிகளுக்கு ரூ 1.24 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினர்.
இம் முகாமில், 34 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 19 பேருக்கு பட்டா மாற்றம், 11 பேருக்கு குடும்ப அட்டை, 46 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 16 பேருக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், 642 மனுக்கள் பெறப்பட்டதில் 456 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 101 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உடன்
செய்யாறு கோட்டாட்சியர் பல்லவி வா்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வந்தவாசி வட்டாட்சியா்ஆா்.பொன்னுசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment